Last Updated : 01 Mar, 2015 03:15 PM

 

Published : 01 Mar 2015 03:15 PM
Last Updated : 01 Mar 2015 03:15 PM

மியன்மர் நாட்டு காடுகளில் பிடிபட்ட அரிய வெள்ளை யானை

மியன்மர் நாட்டின் காட்டிலாகா அதிகாரிகள் மிக அரிதான வெள்ளை யானை ஒன்றை அதன் மேற்குக் காடுகளிலிருந்து பிடித்து வந்துள்ளனர்.

மேற்குப் பகுதியில் உள்ள அயேயார்வாடி காடுகளிலிருந்து இந்த வெள்ளை யானை வெள்ளிக்கிழமையன்று பிடித்துக் கொண்டு வரப்பட்டுள்ளது.

7 வயது பெண் வெள்ளை யானையான இது மியன்மர் காட்டிலாகா அதிகாரிகளால் பிடிக்கப்படும் 9-வது வெள்ளை யானை என்று வனத்துறை அதிகாரி டுன் டுன் ஊ தெரிவித்துள்ளார்.

6’3 அடி உயரமுள்ள இந்த வெள்ளை யானை மிகவும் ஆக்ரோஷமானது எனவே வன ஊழியர்கள் காயமடையாமல் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பிடிக்கப்பட்ட 8 வெள்ளை யானைகள் அந்நாட்டின் மிருகக் காட்சி சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வெள்ளை யானைகள் காட்டிலிருந்து பிடித்து வரும்போது அந்த யானைகளை அலங்கரித்து அழைத்து வருவது மியன்மர் அரசின் வழக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x