Published : 26 Mar 2015 08:52 AM
Last Updated : 26 Mar 2015 08:52 AM
பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கருத்து வேறுபாடு இருப்பதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புக் கொண்டார்.
வாஷிங்டன் சென்றுள்ள ஆப் கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி யுடன் கூட்டாக இணைந்து செய்தி யாளர்களிடம் ஒபாமா கூறியதாவது:
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வுடன் வர்த்த ரீதியாக சுமுகமான உறவு உள்ளது. ஆனால், பாலஸ்தீன விவகாரத்தில் நெதன்யாகுவின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினைக்கு இரண்டும் தனித்தனி நாடுகளாவதுதான் தீர்வாக இருக்கும். இதன்மூலம் அப்பகுதியில் அமைதியை நிலை நாட்ட முடியும். ஆனால் அவர் இதை ஏற்க மறுக்கிறார். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT