Last Updated : 27 Mar, 2015 01:05 PM

 

Published : 27 Mar 2015 01:05 PM
Last Updated : 27 Mar 2015 01:05 PM

வங்கதேசத்தில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

வங்கதேசத்தில் உள்ள இந்துக் கோயிலில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி மிதிப்பட்டு 10 பேர் பலியாகினர்.

வங்கதேசத்தின் லங்கல்பங்க் பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக பிரம்மபுத்ரா நதிக்கரையில் புனித நீராட மக்கள் கூட்டம் குவிந்தது.

அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் பலியாகினர். மிதிப்பட்டு இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

பிரம்மபுத்ரா நதிக்கரையில் நடக்கும் புனித நீராடலில் கலந்து கொள்ள இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்து மத பக்தர்கள் செல்வது வழக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x