Published : 31 Mar 2015 12:08 PM
Last Updated : 31 Mar 2015 12:08 PM
பாகிஸ்தானில் இன்று மேலும் 4 தூக்கு தண்டனை கைதிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் கடந்த டிசம்பரில் பெஷாவர் ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை கொன்றனர்.
இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் 2008-ம் ஆண்டு முதல் இருந்து வந்த தூக்குத் தண்டனை தடை கடந்த 10-ம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள பல்வேறு சிறைகளில் தூக்கு தண்டனைகள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 66 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு சிறைகளிலிருந்து 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT