சீனாவில் மத மோதலில் ஈடுபட்ட மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் மத மோதலில் ஈடுபட்ட மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
Updated on
1 min read

சீனர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக மூன்று பேருக்கான தூக்கு தண்டைனை தென் கிழக்கு சீன நீதிமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2014-ல் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மத சிறுபான்மையினரான‌ யூகுர் முஸ்லிம் இனத்தவர்களுக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது. அப்போது சிலர் கத்தி, கோடரி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தியதால் கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 3 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in