Published : 23 Feb 2015 12:54 PM
Last Updated : 23 Feb 2015 12:54 PM
பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "9 மாத இடைவெளிக்குப் பின்னர் தாங்கள் மீண்டும் பிஹார் மாநில முதல்வராகியுள்ளதற்கு திமுக சார்பில் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை தாங்கள் முதல்வராக இருந்தபோது எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டீர்கள். தாங்கள் மீண்டும் முதல்வராகியுள்ள நிலையில், பிஹார் மாநிலத்தில் அமைதியும், வளமும் மேலோங்கும்" என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT