Last Updated : 14 Feb, 2015 09:05 AM

 

Published : 14 Feb 2015 09:05 AM
Last Updated : 14 Feb 2015 09:05 AM

தமிழகத்தில் ஆம் ஆத்மி வெற்றி சாத்தியம் இல்லை: சுப.உதயகுமார் கருத்து

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் முன்னாள் ஆதரவாளர் சுப.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆம் ஆத்மி கட்சியில் என்னென்ன மாற்றங்கள் செய் தால், அது எழுச்சி பெறும் என்ற கேள்வியை அக்கட்சியின் முன் னாள் வேட்பாளரும், கட்சியில் இருந்து விலகியவருமான சுப.உதயகுமாரிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறியதாவது:

தற்போதுள்ள சூழலில் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் சாதிக்க முடியாது. காரணம், அந்தக் கட்சியிலும் மற்ற தேசிய கட்சிகளைப்போல ஒரே கட்சி, ஒரே தலைமை, ஒரே சின்னம் என்ற மையப்படுத்துதல் இருக்கிறது. கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் இந்தி பேசக்கூடிய 9 பேருக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் இருந்தது. தமிழகத்தில் ஆம் ஆத்மி என்ற பெயருக்குப் பதில் சாமானியர் கட்சி என்று வைத்துக் கொள்ளலாம் என்ற யோசனையைக்கூட ஏற்க மறுத் தார்கள். தமிழக நிலைமையை அறியாதவர்களாகவும், அறிய விரும்பாதவர்களாகவும் அவர்கள் இருந்ததால்தான் நாங்கள் விலகினோம்.

கட்சிக்கு தமிழ் பெயரும், மாநிலத்துக்கென தனி செயல் திட்டங்கள் தேவை. தமிழகத்தில் மக்கள் நலனுக்கான அரசியலைத் தருகிற புதிய இயக்கம் தேவை. அது தமிழர்களால் தமிழர்களுக்காக நடத்தப்படும் இயக்கமாக இருக்க வேண்டும்.

அவ்வாறு ஒரு இயக்கம் உரு வாகவும், அது சுயாட்சி பெற்ற அமைப்பாக செயல்படவும் ஆம் ஆத்மியின் டெல்லி தலைமை அனுமதிக்க வேண்டும். இவை எல்லாம் நடந்தால் தமிழகத்திலும் மாற்றம் வரும் என்றார்.

ஆம் ஆத்மியின் மாநில செய்தி தொடர்பாளர் வி.சந்தியாவிடம் கேட்டபோது, “டெல்லி வெற்றியைத் தொடர்ந்து, நிறைய இளைஞர்களும், பொது மக்களும் கட்சியில் சேர ஆர்வமுடன் முன்வருகிறார்கள். கட்சியை விரிவுபடுத்தும் பணி களை ஜனவரி மாதமே தொடங்கி விட்டோம். மார்ச் முதல் வாரத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.

எனவே, 2016-ல் தமிழகத்தில் தேசிய, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வர முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x