Last Updated : 20 Feb, 2015 10:22 AM

 

Published : 20 Feb 2015 10:22 AM
Last Updated : 20 Feb 2015 10:22 AM

தீவிரவாதத்தை ஆதரிக்கும் மதரஸாக்கள் மீது கடும் நடவடிக்கை- அதிகாரிகளுக்கு பாக். பிரதமர் உத்தரவு

தீவிரவாதத்தை ஆதரிக்கும் மதரஸாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பலுசிஸ்தான் பகுதியில் தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த அங்கு உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் கூட்டத்தில் நவாஸ் பேசியதாவது:

பாகிஸ்தானில் இருந்து தீவிர வாதத்தை வேரறுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மதரஸாக்களில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கருத்தரங்குகளோ வேறு நிகழ்ச்சி களோ நடத்தப்பட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பெஷாவர் பள்ளி தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 142 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மதரஸாக்களின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x