Published : 03 Feb 2015 10:23 AM
Last Updated : 03 Feb 2015 10:23 AM

இராக்கில் ஒரே மாதத்தில் 1375 பேர் பலி

இராக்கில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜனவரி மாதத்தில் நடத்திய தாக்குதல்களில் 1375 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இராக்கில் ஜனவரியில் மட்டும் சுமார் 790 பொதுமக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். பாதுகாப்பு படை தரப்பில் 585 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு மாதத்தில் மட்டும் மொத்தம் 1375 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர், மருந்துகள் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் அவதியுறுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராக்கில் மேற்கு, வடக்குப் பகுதியில் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகளும் இராக் ராணுவமும் தொடர்ந்து போரிட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x