Last Updated : 16 Feb, 2015 01:43 PM

 

Published : 16 Feb 2015 01:43 PM
Last Updated : 16 Feb 2015 01:43 PM

பாக். சிறையில் இருந்து 172 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து பாகிஸ்தான் மாலிர் சிறை நிர்வாக கண்காணிப்பாளர் முகமது ஷெத்தோ கூறும்போது, "உத்தரவின்படி இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் சிறையிலிருந்து வாகா எல்லைக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அரேபியக் கடலில் எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக கைதாகி கராச்சியில் உள்ள மாலிர் மற்றும் லாந்தி சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

இவர்களில் சிலர் தங்களது தண்டனைக் காலத்தை நிறைவு செய்தவர்கள். மற்றவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃபும் இரு நாடுகளின் உயர்மட்ட பேச்சுக்கு சம்மதம் தெரிவித்த 2 நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x