Last Updated : 19 Feb, 2015 10:27 AM

 

Published : 19 Feb 2015 10:27 AM
Last Updated : 19 Feb 2015 10:27 AM

ஜமாத் இ இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது, போர்க்குற்றம் புரிந்ததாக, பழைமைவாத ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவருக்கு சிறப்பு தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

அப்துல் சுபான் (80) என்பவர் மீது, போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது தொடரப்பட்ட 9 வழக்குகளில் ஆறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை யடுத்து, அவரை தூக்கிலிட மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வின் தலைவர் அபையதுல் ஹக் நேற்று உத்தரவிட்டார்.

தீர்ப்பு வெளியானதும், நீதி மன்றத்துக்கு வெளியே மூன்று நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இவற்றை அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் வெடிக்கச் செய்திருக்கலாம் எனச் சந்தேகிக் கப்படுகிறது.

அப்துல் சுபான் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் துணைத் தலைவர் ஆவார். வங்கதேச சுதந்திரப் போரின்போது, எதிர்த்தரப்பினருக்கு உதவும் வகையில் போரிட்டதாகவும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக வும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதில், சுபான், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூலம் பப்னா கிராமத்தில் 300 பேரைச் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றம் நிரூபிக் கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச சுதந்திர போரின்போது, பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் கூட்டுப் படையினரால் 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2010-ம் ஆண்டு போர்க்குற்ற விசாரணைகள் தொடங்கப்பட்டதிலிருந்து ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர்கள் 17 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதும், கட்சியின் இணை பொதுச் செயலாளர் அப்துல் காதர் முல்லாவுக்கு மட்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x