Published : 14 Feb 2015 11:26 AM
Last Updated : 14 Feb 2015 11:26 AM
தமிழர்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்தவே வடமாகாண சட்டப்பேரவையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றினோம் என்று அந்த மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை நேற்றுமுன்தினம் விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
சந்திப்புக்கு பிறகு விக்னேஸ்வரன் கூறியதாவது:
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடம் அளிக்கப்படும், இடம்பெயர்ந்த தமிழர்களை அங்கு மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் உறுதியளித்துள்ளார் என்றார்.
மேலும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ள இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை இரு நாட்டு அரசுகளும் தடை செய்ய வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் ஆலோசனை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT