Published : 05 Feb 2015 10:33 AM
Last Updated : 05 Feb 2015 10:33 AM
சீனா இலங்கை இடையிலான உறவு வரும் காலத்தில் மேலும் வலுவடையும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 67-வது சுதந்திரம் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு ஜி ஜின்பிங் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில் “சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவு கொண்ட அண்டை நாடுகள். இரு நாடுகளிடையே வலுவான உறவு நீடிக்கிறது.
வரும் காலத்தில் இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பரம் பலனளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என நம்புகிறேன். கடந்த ஆண்டு எனது இலங்கை பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இலங்கை மக்கள் காட்டிய அன்பு என்னை நெகிழச்செய்தது.
இலங்கையுடனான உறவுக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. இரு நாடுகளிடைய பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடரும் நட்புறவு அடிப்படை யில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT