Last Updated : 28 Feb, 2015 04:56 PM

 

Published : 28 Feb 2015 04:56 PM
Last Updated : 28 Feb 2015 04:56 PM

அமெரிக்கா: துப்பாக்கியால் தவறுதலாக சுட்டுக்கொண்ட 3 வயது சிறுவன் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 3 வயது சிறுவன் துப்பாக்கி வைத்து விளையாடியபோது தன்னைத் தானே தவறுதலாக சுட்டுக் கொண்டதில் பலியானார்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் நகரைச் சேர்ந்த 3 வயது சிறுவன், வீட்டிலிருந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். உடனடியாக சிறுவனின் தாயார் கவனித்து அவசர உதவியை தேடியுள்ளார்.

சிறுவனை உடனடியாக ஹெலிகாப்டரின் மூலம் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று என்.பிசி. செய்தி தெரிவிக்கிறது.

விளையாடும் போது தெரியாமல் தன்னைத்தானே துப்பாக்கியில் சுட்டுக் கொண்டு இறந்த சிறுவனின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x