Last Updated : 06 Feb, 2015 10:46 AM

 

Published : 06 Feb 2015 10:46 AM
Last Updated : 06 Feb 2015 10:46 AM

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை கட்டுப்படுத்த முஸ்லிம் தலைவர்களுடன் ஒபாமா ஆலோசனை

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக முஸ்லிம் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

சிரியா, இராக்கில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு உலகம் முழுவதும் கால் ஊன்றி வருகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து ஏராளமான இளைஞர்கள் அந்த அமைப் பில் இணைந்து வருகின் றனர்.

மேற்கத்திய பிணைக் கைதிகளை கழுத்தறுத்து கொலை செய்யும் வீடியோவில் தோன்றும் முகமூடி நபர் பிரிட்டனைச் சேர்ந்த ‘ஜிகாதி ஜான்’ என்று புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன. இவரை போன்று ஐரோப்பாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஐ.எஸ். அமைப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் பிரான்ஸ் தலை நகர் பாரீஸில் ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதி நடத்திய தாக்குதல் ஐரோப்பா கண்டம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா வைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர் களுடன் அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா நேற்றுமுன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். பூட்டிய அறையில் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஐ.எஸ். அமைப்பு கால் ஊன்றுவதை தடுப்பது குறித்தும் அந்த அமைப்புக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x