Published : 04 Feb 2015 10:13 AM
Last Updated : 04 Feb 2015 10:13 AM
அமெரிக்காவில் சைபர் பாது காப்பை மேம்படுத்துவதற்காக 2016-ம் நிதியாண்டுக்கு 1,400 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 86,513 கோடி) பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய அதிபர் பராக் ஒபாமா கருத்துரு அனுப்பியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஒபாமா நேற்று முன்தினம் அனுப்பியுள்ள பட்ஜெட் வரைவில், சைபர் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டு வந்த தொகையை 100 கோடி டாலர்கள் (சுமார் ரூ. 6,173 கோடி) அதிகரித்து கருத்துரு அனுப்பியுள்ளார்.
சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுக ளால் அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்களைச் சமாளிக்கவும், அண்மையில் சோனி பிக்சர்ஸ் நிறு வனத்தில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களை கருத்தில் கொண் டும் பட்ஜெட்டில் சைபர் பாதுகாப் புக்கான தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக 1,300 கோடி அமெரிக்க டாலர்கள் சைபர் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அரசின் தகவல், தகவல் கட்டமைப்புகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் சைபர் தாக்கு தல்கள் பெரும் சவால் அளிக்கின் றன. எனவே, பாதுகாப்பு அம்சங் களை வலுப்படுத்துவதற்காகவும், தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் பட் ஜெட்டில் நிதி அதிகரிக்கப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT