Published : 28 Jan 2015 10:36 AM
Last Updated : 28 Jan 2015 10:36 AM
என்னிடம் விளக்கம் கேட்கும் அதிகாரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கே உள்ளது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அனுப்பியுள்ள பதிலில் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், கடந்த 22-ம் தேதி சென்னை ஆந்திரா கிளப்பில் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தினார். இதில் காங்கிரஸ் தலைமையையும் கட்சி மேலிடத்தையும் கார்த்தி சிதம்பரம் விமர்சித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக 30-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு கடிதம் அனுப்பினார்.
இதற்கு பதிலளித்து இளங்கோவ னுக்கு கார்த்தி சிதம்பரம் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ள தாவது: கடந்த 22-ம் தேதி என் நண்பர்களுக்கு தனிப்பட்ட முறை யில் மதிய உணவு விருந்து அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கொடி யையோ, சின்னத்தையோ பயன் படுத்தவில்லை. மேலும் பத்திரிகை யாளர்கள் யாரும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வில்லை.
நான் பேசியதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருந்தால், கட்சித் தலைமையையோ, கொள்கையையோ விமர்சித்து பேசவில்லை என்பது புரிந்திருக் கும். எனவே, இதில் விளக்கம் கேட்பதற்கும் விளக்கம் அளிப்பதற்கும் ஏதுமில்லை.
மேலும் நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ளேன். என்மீது நடவடிக்கை எடுப்பதற்கோ, விளக்கம் கேட்ப தற்கோ அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மட்டுமே அதிகாரம் பெற்ற அமைப்பாகும். என் மீதுள்ள குற்றச்சாட்டுகளை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்குத் தெரிவித்து, அவர்கள் விளக்கம் கேட்டால், அதற்கு பதிலளிக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT