Last Updated : 31 Jan, 2015 10:57 AM

 

Published : 31 Jan 2015 10:57 AM
Last Updated : 31 Jan 2015 10:57 AM

உருக்குலைகிறதா உக்ரைன்?- 1

உக்ரைன் -ரஷ்யா மோதல் செய்திகளைப் படித்து விட்டு உலக வரைபடத்தில் இந்த இரண்டு நாடுகளையும் பார்ப்பவர்களுக்குப் பெரும் வியப்பு காத்திருக்கும்.

சோவியத் யூனியன் பிளவு பட்ட பிறகும் ரஷ்யா மிக பிரம் மாண்டமாக இன்னமும் தன் பரப் பளவில் பரந்து விரிந்துதான் இருக்கிறது. அதன் மேற்குப் பகுதி யில், கிழக்கு ஐரோப்பாவில் ஒரு தவளைபோல சிறுத்திருக்கிறது உக்ரைன். கருங்கடலைத் தன் தென் எல்லையாகக் கொண்ட நாடு உக்ரைன்.

முன்பு சோவியத் யூனியன் இணைந்திருந்தபோது அதில் இருந்த நாடுகளில் ரஷ்யாவும் உண்டு, உக்ரைனும் உண்டு. ஆனால் இன்று இந்த இரண்டும் எதிர் துருவங்களாகிவிட்டன.

உக்ரைன் தனக்குள்ளேயே பிளவுபட்டிருக்கிறது. எல்லைக் கோடுகளால் அல்ல. வேறு பல விஷயங்களில். மொழிக்கு இதில் முக்கியப் பங்கு உண்டு.

உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்களில் பலரும் உக்ரைனியன் எனும் மொழியைப் பேசுபவர்கள். இவர்கள் ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் உறுப்பினராவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர் களில் பலரும் ரஷ்ய மொழியைப் பேசுபவர்கள். ரஷ்யா ஓர் அசைக்க முடியாத கூட்டாளியாக உக்ரை னுக்கு அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள். ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் உறுப்பின ராக வேண்டாம் என எண்ணுகிறார் கள். ரஷ்யா அதில் உறுப்பினராக முடியாது என்பது முக்கிய காரணம்.

இப்படி இரண்டுபட்டுக் கிடப் பதால் உள்ளூரில் பல கலவரங்கள் நடைபெறுகின்றன.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள வீடுகளின் மீதெல்லாம் உக்ரைன் ராணுவம் குண்டு வீசுகிறது என்கின்றனர் ரஷ்யப் புரட்சியாளர்கள். இதை உக்ரைன் மறுக்கிறது. அதேசமயம் ரஷ்ய புரட்சியாளர்களின் செயல்பாடு தங்கள் ராணுவத்தை இயங்க வைத்துவிடும் அபாயத்துக்கு வழி வகுக்கும் என்றும் எச்சரிக்கிறது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் உண்டான மோதல் பிரிவினைக்குப் பிறகு உண்டானதா? அல்லது அதற்கும் முன்பாகவா? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமென்றால் சோவியத் உருவான கதையையும் அது பிளவுபட்ட பின்னணியையும் அறிந்து கொள்ள வேண்டும்.

முதலில் சோவியத் யூனியன் உருவான விதத்தை அறிந்து கொள்வோம்.

தொடக்கத்தில் அந்த நிலப் பகுதி ரஷ்யப் பேரரசாகத்தான் இருந்தது. மிகவும் பரந்து பட்டி ருந்தது. பத்தொன்பதாம் நூற்றண் டின் தொடக்கத்தில் சீனா, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆகியவற்றுக்கு அடுத்ததான பெரிய சாம்ராஜ்யம் ரஷ்ய பேரரசுதான். மன்னர்கள் ஆண்ட பகுதியாகத்தான் இருந்தது.

1905ல் ரஷ்யப் புரட்சி நடந்த பிறகு அங்கு முழுமையான முடியாட்சி என்பது அரசியல் சட்ட முடியாட்சியாக (constitutional monarchy) மாறியது. ஆனாலும் கூட மன்னர் அரசியலில் பலம் மிகுந்தவராகத்தான் இருந்தார். 1917-ல் நடைபெற்ற பிப்ரவரி புரட்சி, மன்னராட்சியை முற்றிலு மாக ஒழித்தது.

ரஷ்ய பேரரசில் அன்று இருந்த நாடுகள் இணைந்து ஒரே நாடாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. யூனியன் ஆஃப் சோவியத் சோஷலிஸ்ட் ரிபப் ளிக்ஸ் என்று தங்களது ஒற்று மையை ஒரே பெயரில் காட்டிக் கொண்டன. அதன் சுருக்கம்தான் சோவியத் யூனியன்.

மன்னராட்சி களையப்பட்டு சோவியத் யூனியன் உருவான தற்கு லெனின் தலைமையில் அமைந்த புரட்சிப் படை முக்கி யக் காரணம். சோவியத் யூனியன் என்று ஆனவுடன் அங்கு கம்யூனிஸ அரசு அமைந்தது.

சோவியத் யூனியனின் மிகப் பெரிய நாடு ரஷ்யா என்பதால் எதிர்பார்த்தபடி (ரஷ்யாவில் அமைந்த) மாஸ்கோதான் சோவியத் யூனியனின் தலைநக ரானது. பரப்பளவைப் பொறுத்த வரை, சோவியத் யூனியனில் (ரஷ்யாவில் பாதி கூட இல்லாத) கஜகஸ்தானுக்கு இரண்டாம் இடம்.

சோவியத்தில் `அனைவரும் சமம்’ என்பதை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிஸ அரசு அமைந்தது. இதன் விளைவாக பல அடிப்படை மாற்றங்கள் அங்கு நிகழ்ந்தன. யாரும் தனிப்பட்ட சொத்துக்களை வைத்திருக்க முடியாது. எல்லாமே அரசினுடை யது. உழைப்பாளர் குழுக்களுக்கு மிக முக்கியத்துவம் கிடைத்தது. (‘சோவியத்’ என்றாலே உழைப்பா ளர் குழு என்றுதான் பொருள்).

இந்த நிலையில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நடுவே பிளவு ஏற்பட்டது.

இப்போது மேற்கு உக்ரைனில் உக்ரைனிய மொழி பேசுபவர் களும், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுபவர்களும் அதிகமாக உள்ளனர் என்று குறிப்பிட்டிருந் தோம். ஒரு காலத்தில் கிழக்கு உக் ரைனிலும், உக்ரைனிய மொழி பேசும் மக்கள்தான் நிறைந்திருந் தனர்.சோவியத் யூனியனை ஸ்டாலின் ஆண்டபோது நடை பெற்ற நிகழ்ச்சி இது.

1932-ல் உக்ரைன் பகுதியில் ஒரு பெரும் பஞ்சம் உண்டானது. (அப்போது சோவியத் யூனியனை ஆட்சி செய்த ஸ்டாலின்தான் இந்தப் பஞ்சத்தைச் செயற்கை யாக உண்டாக்கினார் என்பவர் களும் உண்டு). இந்தப் பஞ்சத்தின் காரணமாக சுமார் 1 கோடி மக்கள் இறந்தனர். அந்தப் பகுதியில் கோடிக்கணக்கான ரஷ்யர்களை கொண்டு வந்தார் ஸ்டாலின்.

மேற்கு உக்ரைன் அப்போது போலந்தின் ஒரு பகுதியாக இருந்தது. இதன் காரணமாக அங்கு ரஷ்யர்களைக் குவிக்க முடியவில்லை.

ஸ்டாலின் இப்படி எக்கச்சக்க மான ரஷ்யர்களை கிழக்கு உக் ரைனில் குவித்ததற்கு ஒரு வஞ்சகப் பின்னணி உண்டு.

(இன்னும் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x