Published : 13 Jan 2015 10:47 AM
Last Updated : 13 Jan 2015 10:47 AM
இலங்கை தலைமை நீதிபதிக்கு எதிராக தலைநகர் கொழும்பில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அதிபர் ராஜபக்சவின் ஆட்சியின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஷிரானி பண்டாரநாயக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதி மோகன் பெரீஸ் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தலைமை நீதிபதி மோகன் பெரீஸ் பதவி விலக வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நேற்று கொழும்பில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT