Published : 30 Jan 2015 10:51 AM
Last Updated : 30 Jan 2015 10:51 AM
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிர வாதிகள் இரு வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் பலியாயினர்.
இதுகுறித்து கிழக்கு லக்மன் மாகாண செய்தித் தொடர்பாளர் சர்ஹதி ஸ்வாக் கூறும்போது, “தலைநகர் மிதர்லாம் நகரில் உள்ள சாலையோரம் வியாழக்கிழமை காலையில் வெடிகுண்டு வெடித்ததில் ஒரு போலீஸ் உட்பட 4 பேர் பலியாயினர்” என்றார்.
மற்றொரு தாக்குதல்
மத்திய கஸ்னி மாகாண துணை ஆளுநர் முகமது அலி ஆமதி கூறும்போது, “அந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடி மீது புதன்கிழமை இரவு தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் அரசு ஆதரவுப் படையைச் சேர்ந்த 11 பேர் பலியாயினர், 6 பேர் காயமடைந்தனர். மேலும் அரசுப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் தரப்பில் 6 பேர் பலியானதுடன் 7 பேர் காயமடைந்தனர்” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜா ஹித் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT