Published : 08 Jan 2015 11:41 AM
Last Updated : 08 Jan 2015 11:41 AM
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்ச மெதமுலான தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தேர்தல் களத்தில் 19 வேட்பாளர்கள் இருந்தாலும், 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவிற்கெனநாடு முழுவதும் போலீசார் உள்ளிட்ட 71 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை இன்று இரவு 8 மணியளவில் தொடங்கி விடும். நள்ளிரவு முதல் முடிவுகள் வெளியிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT