Last Updated : 19 Jan, 2015 10:24 AM

 

Published : 19 Jan 2015 10:24 AM
Last Updated : 19 Jan 2015 10:24 AM

தொடர்ந்து 3 நாட்கள் வீடியோ கேம் விளையாடியதால் மரணம்

தைவான் நாட்டில் தொடர்ந்து 3 நாட்கள் இடைவிடாது வீடியோ கேம் விளையாடிய ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தைவானின் கோசியுங் நகரத்தில் வசிப்பவர் சீஹ் (32). இவர் இணைய மையத்தில் தினமும் வீடியோ கேம் விளையாடி வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த இணைய மையத்தில் வீடியோ கேம் விளையாடத் தொடங்கினார். இடைவிடாமல் மூன்று நாள் விளையாடிக் கொண்டே இருந்தார்.

அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இணைய மையத்தைத் திறக்கும்போது, தன் இருக்கையில் சீஹ் எந்த ஓர் அசைவுமின்றிக் கிடந்தார். அவர் தூங்கிப் போயிருக்கலாம் என்று நினைத்த இணைய மைய நிர்வாகிகள், அவர் மூச்சுவிடாமல் இருப்பது தெரிந்தவுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனைக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து வீடியோ கேம் விளையா டியதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x