Published : 19 Jan 2015 12:13 PM
Last Updated : 19 Jan 2015 12:13 PM
இஸ்லாமாபாத்: நாட்டில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட்டு மக்களுக்கு பெட்ரோல் நிவாரணம் வழங்கப்படும் என்றார் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்.
பெட்ரோலின் தேவைக்கும் அது வழங்கப்படுவதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை களையும்விதமாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டில் எழுந்துள்ள எரிபொருள் பிரச்சனைகள் குறித்து திங்கள் அன்று நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் முக்கிய முடிவுகள் எடுப்பார் எனத் தெரிகிறது.
கடந்த ஒரு வாரமாகவே பெட்ரோல் தேவை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
ஷெரீப் கடந்த ஞாயிறு அன்று நாட்டில் உருவாகியுள்ள பெட்ரோல் பிரச்சனை குறித்து விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தார். சனிக்கிழமை சவுதி அரேபியாவிலிருந்து திரும்பியதும் பெட்ரோலியத்துறை செயலாளர் அபீட் சயீத், அவரது துணைச் செயலாளர் நயீம் மாலிக், மாநில பெட்ரோலியத் துறைத் தலைமை அதிகாரி அம்ஜத் ஜான்ஜூவா ஆகியோரை சந்தித்து இதுகுறித்து ஆய்வு செய்தார்.
இந்தப் பெட்ரோல் பிரச்சனையால் 2000க்கும் அதிகமான மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் 7,000 மெகாவாட் மின்சக்தியின் தேவையை உருவாக்கியுள்ளது. மேலும் நிறைய மின்உற்பத்தி நிலையங்கள் விரைவில் தங்கள் வேலையை நிறுத்த உள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அரசின் மெத்தனப்போக்குக்கு எதிர்கட்சித்தலைவர் இம்ரான்கான் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT