Last Updated : 22 Jan, 2015 11:05 AM

 

Published : 22 Jan 2015 11:05 AM
Last Updated : 22 Jan 2015 11:05 AM

முக்கிய கொலைகளை விசாரிக்க இலங்கை முடிவு

முன்னாள் அதிபர் ராஜபக்ச ஆட்சியில் முக்கியப் பிரமுகர்கள் பலர் கொல்லப்பட்டது தொடர்பாக புதிய அரசு உரிய விசாரணை நடத்தும் என, அமைச்சர் ரஜிதா சேனாரத்னே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும் போது, “சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே, தமிழ் எம்.பி.க்கள் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜ ரவிராஜ், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுல்லே ஆகியோர் கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்” என்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஜோசப் பரராஜசிங்கம், நடராஜ ரவிராஜ் ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர். பத்திரிகையாசிரியர் விக்ரமதுங்கே, ராஜபக்சவை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x