Last Updated : 02 Dec, 2014 09:51 AM

 

Published : 02 Dec 2014 09:51 AM
Last Updated : 02 Dec 2014 09:51 AM

பாகிஸ்தானை முடக்குவோம்: இம்ரான் கான் எச்சரிக்கை

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிரான தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும், இல்லையெனில் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் முடக்குவோம் என்று தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

கடந்த 2013 பொதுத்தேர்தலின்போது நவாஸ் ஷெரீப் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாக இம்ரான்கான் குற்றம் சாட்டி வருகிறார். இதுகுறித்து இஸ்லாமாபாதில் அவர் மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு நகரமாக ஆட்சி நிர்வாகத்தை முடக்குவோம். டிசம்பர் 4-ம் தேதி லாகூர், 8-ம் தேதி பாஷியாபாத், 12-ம் தேதி கராச்சி என அனைத்து நகரங்களையும் செயலிழக்கச் செய்வோம். டிசம்பர் 16-ம் தேதி ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் முடக்குவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x