Published : 02 Dec 2014 01:54 PM
Last Updated : 02 Dec 2014 01:54 PM

தாலிபன் தாக்குதலில் ஆப்கன் ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாகினர்.

ஆப்கனின், வட மேற்கு மாகாணத்தில் பாத்கிஸ் பகுதியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியை குறிவைத்து தாலிபன் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் லாஞ்சர் மூலம் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும். இதில் 6 வீரர்கள் பலியானதாகவும் ஆப்கன் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x