ஏமனில் படகு மூழ்கி 70 அகதிகள் பலி

ஏமனில் படகு மூழ்கி 70 அகதிகள் பலி
Updated on
1 min read

ஏமன் கடல் பகுதியில் அகதிகளை அழைத்து வந்த படகு மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அதற்கு அவர்கள் ஏமன் நாட்டை நுழைவுவாயிலாகப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் எத்தியோப்பியாவை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக ஒரு படகில் ஏமனுக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களின் படகு ஏமன் அருகே வந்தபோது கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 70 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஏமன் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in