Published : 03 Dec 2014 09:53 AM
Last Updated : 03 Dec 2014 09:53 AM
பாகிஸ்தான் ராணுவத்தின் நேற்று நடத்திய இருவேறு தாக்குதல்களில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமுள்ளது. இப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வடக்கு வஜிரிஸ்தானின் தாட்டாகெல் பகுதியில் நேற்று பாகிஸ்தான் போர் விமானங்கள் தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பகுதியில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT