Last Updated : 25 Dec, 2014 12:48 PM

 

Published : 25 Dec 2014 12:48 PM
Last Updated : 25 Dec 2014 12:48 PM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 9

சோவியத் ராணுவம் தங்கள் நாட்டில் புகுந்துவிட்டது போதாதென்று சோவியத் போலவே தங்கள் நிலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக பொதுவுடமை ஆவதைக் கண்டு முஜாகிதீன்கள் கொதித்தனர்.

ஆனால் இவர்கள் வெவ் வேறு குழுக்களாக இருந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு முக்கிய தலைவர். வடபகுதியில் உஸ்பெக் இனத் தலைவராக தோஸ்தும் வலிமையாக இருந்தார். வடகிழக்குப் பகுதியில் தஜிக் இனத்தலைவர் ரப்பானியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மேற்குப் பகுதியில் இஸ்மாயில் கான் என்பவரும் பானியான் உள்ளிட்ட நடுப் பகுதிகளில் ஹஸாரா இனத்தவரும் அதிகாரம் பெற்று விளங்கினார்கள். தெற்குப் பகுதியில் ஹிக்மக்தியார் என்பவர் ஆட்சி செய்தார். இவர்களைத் தவிர காந்தஹாரிலும் சிறு சிறு பிரதேசங்களிலும் பல குட்டித் தலைவர்கள் அதிகாரம் செலுத்தி வந்தனர்.

இத்தனை பிரிவுகள் இருந்ததி னாலும் அவர்களுக்கிடையே விரோதங்கள் வேர்விட்டிருந்த தாலும் முஜாகிதீன்களால் ஒரு கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை. (இவர்களைத் தாண்டியும் முக்கிய ராணுவத் தளபதியாக விளங்கிய அகமத் ஷா மசூத் பிரிவுகளை ஓரளவு ஒன்றிணைத்து, பின்னர் தாலிபன்களுக்கு பெரும் தலைவலியாக விளங்கி ஒசாமா பின்லேடன் திட்டத்தால் கொலை செய்யப்பட்டது தனிக்கதை)

சோவியத் படைகளும், முஜா கிதீன்களும் புரிந்த போரில் இருதரப்பிலும் பலர் இறந்தனர். இறுதியில் சோவியத் தோற்றது. இதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. முஜாகிதீன்களுக்கு அமெரிக்கா பெரும் நிதி உதவி செய்தது. சோவியத் ராணுவத் தினருக்கு கெரில்லா போர் முறை தெரிந்திருக்கவில்லை. பெரும் பரப் பளவு கொண்ட ஆப்கானிஸ்தா னின் பல்வேறு சீதோஷ்ண நிலைகளால் சோவியத் படை திண்டாடியது. தவிர சோவியத் பொருளாதாரம் இந்தப் போரினால் தள்ளாட ஒரு கட்டத்தில் சோவியத் படைகள் பின்வாங்கின.

முஜாகிதீன்கள் காபூலைக் கைப்பற்றினர். ஆனால் கைப்பற்றி யது தஜிக் படை. இதன் காரண மாக பஷ்டூன்களுக்கு திருப்தி இல்லாமல் போனது. முஜாகிதீன்கள் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு மீண்டார் கள். என்றாலும் தங்கள் நாடு இப்படி சின்னாபின்னாமாவது கண்டு வேதனைப் பட்டார்கள். ஷாரியா சட்டத்தை தங்கள் நாட்டில் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தீர்மானித்தார்கள். தாலிபன் பிறந்தது. ஆப்கானியர்களால் உருவா னதுதான் தாலிபன். ஆனால் அது பிறந்தது பாகிஸ்தானில்தான். (தாலிப் என்றால் இஸ்லாமிய மாணவன் என்று பொருள். தாலிபன் என்றால் இஸ்லாமிய மாணவர்கள்). இந்த இயக்கத்தை நிறுவியவர்களில் பலரும் பாகிஸ் தானிலுள்ள மதரஸாக்களில் படித்துக் கொண்டிருந்த ஆப்கன் மாணவர்கள்.

பஷ்டூன்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கத் தொடங் கியது தாலிபன். தாலிபனுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. ஓர் அறிக்கையைக்கூட அவர்கள் ஊடகங்களுக்கு அளித்ததில்லை. தங்கள் பகுதிகளில் புகைப்படம் பிடிக்க தடை. தொலைக்காட்சி கூடாது. இந்தச் சட்டங்களால் தாலிபன் தலைவர்களின் முகங்கள்கூட மக்களுக்குத் தெரியாமல் போய் விட்டது.

தாலிபனின் தலைவராக தேர் தெடுக்கப்பட்டவர் முல்லா ஒமர் (கமலின் விஸ்வரூபம் திரைப் படத்தில் ஒற்றைக் கண்ணுடன் காட்சியளித்த பாத்திரம் இவருடை யதுதான்). இன்றுவரை ரகசியங் களில் பின்னப்பட்டிருப்பவர். பெரிய பெரிய தாக்குதல்களை மனதுக்குள்ளே திட்டமிடுவார். சின்ன காகிதங்களில் யாரை, எதை அழிக்க வேண்டும் என்பதை எழுதி செயல்வீரர்களுக்குக் கொடுப்பார். இதுதான் இவர் ஸ்டைல்.

தங்களின் முதல் குறி காந்தஹார் என்று தீர்மானித்தனர் தாலிபன்கள். நினைத்ததை சாதித்தனர். அடுத்து அடுத்து என்று தாக்குதல்களைப் பரவலாக்கினார்கள். அடுத்த மூன்றே மாதங்களில் ஆப்கானிஸ் தானின் 31 மாகாணங்களில் பன்னிரண்டு அவர்கள் வசம். ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் ஆவேசமான பஷ்டூன் இளைஞர் கள் இந்த சேனையில் சேர்ந்து கொண்டனர்.

இந்த இடத்தில் தாலிபனுக்கும் பாகிஸ்தானுக்கும் உண்டான நெருக்கத்தின் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவை தாலிபன் கள் வலிமையாக உருவாகி காந்த ஹாரின் மீது படையெடுப்பதற்கு முந்தைய நிகழ்வுகள். ஆப்கானிஸ்தானின் கோஷ்டிச் சண்டைகளால் வணிகப் பாதைகள் அடைபட்டதால் பாகிஸ்தான் மிக அதிகம் பாதிக்கப்பட்டது.

பெஷாவரிலிருந்து காபூல் வரையிலான தடம் தடையின்றி இருந்தால்தான் மத்திய ஆசிய நாடுகளுடன் வணிகம் நடத்த முடியும் என்ற நிலை. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு வந்த தாலிபன்களிடம் “எங்கள் பொருள்களுக்கு வழி செய்து கொடுத்தால் உங் களுக்கு எரிபொருள்களும், ஆயுதங்களும் தருவோம்’’ என்றது பாகிஸ்தான். இதற்காக முல்லா ஓமருக்குப் பெரும் தொகையையும் அளித்தது. ஒத்துக் கொண்டது தாலிபன்.

ஆப்கானிய ராணுவத் தளபதி மன்சூரை சுட்டுக் கொன்ற தாலிபன் அணி அவர் உடலை ஒரு பீரங்கியின் நுனியில் தொங்கவிட்டு காட்சிப் பொருளாக்கியது. தாலிபனின் வலிமையையும் கொடூரத்தையும் உலகம் பரவலாக அறிந்து கொள்ளத் தொடங்கியது. அதற்குப் பின் காந்தஹாரை தாலிபன் படை அடைந்தபோது எதிர்ப்பில்லாமல் அது அவர்கள் வசமானது. காந்தஹாரில் இருந்த பீரங்கிகள், போர் விமானங்கள் அனைத்தும் தாலிபன்கள் வசமாயின.

தங்களுக்கான வணிகப் பாதைக் கான தடை நீங்க, “நம்ம பசங்க’’ என்று தாலிபன்களை பாகிஸ்தான் அன்புடன் அழைக்குமளவுக்கு நெருக்கமானது. “எங்களுக்கு சுங்க வரி செலுத்தி விட்டு எந்த நாடும் (அதாவது பாகிஸ்தான்) தனது வணிகத்தை காந்தஹார் மூலம் நடத்திக் கொள்ளலாம்’’ என்றது தாலிபன். அது மேலும் மேலும் பலம் பெற்றது. 1994 இறுதியில் மட்டுமே தாலிப னில் 12,000க்கும் அதிகமானவர்கள் இணைந்தனர்.

“ஐ.நா.என்ன செய்யப்போகி றது? தாலிபனுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை அது கண்டிக்கா தது ஏன்?’’ என்ற கேள்விகள் கிளம்ப ஒரு கட்டத்தில் ஐ.நா. பாகிஸ்தானை நிர்பந்தம் செய்தது. “நாங்கள் தாலி பனை ஊக்குவிக்கவில்லை’’ என்றார் பெனாசிர் பூட்டோ. முழுப் பூசணிக்காய்-சோறு. வளர்த்துவானேன், ஹெல் மண்ட், வார்டக் ஆகிய மாகாணங் களைக் கைப்பற்றினர் தாலிபன் கள். தலைநகரம் காபூல் அங் கிருந்து வெறும் 35 மைல் தூரம் மட்டுமே இருந்தது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x