Published : 08 Dec 2014 03:42 PM
Last Updated : 08 Dec 2014 03:42 PM

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்ச மனு தாக்கல்

இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடும் ராஜபக்ச இன்று மனுத் தாக்கல் செய்தார்.

இலங்கையில், 2015 ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட ஏதுவாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க வேண்டிய தேர்தலும் முன்னதாகவே நடைபெறுகிறது.

ராஜபக்சவை எதிர்த்து அவரது அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொது வேட்பாளராக களம் காண்கிறார். இவருக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x