Last Updated : 23 Dec, 2014 10:13 AM

 

Published : 23 Dec 2014 10:13 AM
Last Updated : 23 Dec 2014 10:13 AM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 7

போர் ஆயுதங்களை வாங்க ஆப்கானிஸ்தான் முன் வந்ததில் அமெரிக்கா வுக்கு என்ன தயக்கம்? வியாபாரம் அதிகமானால் சந்தோஷம்தானே அடைய வேண்டும்? கலவரம் எதற்கு? இந்தக் கேள்விக்கு பதிலாக ஒரு பின்னணியை விவரிக்க வேண்டும்.

சோவியத் யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் தொடங்கிவிட்ட காலகட்டம் அது. ஐரோப்பிய நாடுகளை தனக்கு ஆதரவாகத் திரட்டிய அமெரிக்கா, அடுத்து ஆசிய நாடுகளையும் தனது ஆதரவாளர்களாக மாற்ற திட்டமிட்டது. இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு உதவ பாகிஸ்தான் முன்வந்தது.

1947லிருந்தே பாகிஸ்தானுக் கும், ஆப்கானிஸ்தானுக்கும் நடுவே ஒரு உரசல் தொடங்கியிருந் தது. இந்த நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பஷ்டூன்களும், பலூச் இனத்தவர்களும் நிறையத் தங்கி இருந்தனர். அவர்கள் வசிக்கும் பகுதிகள் தங்களைச் சேர்ந்தவை என்று இந்த இரண்டு நாடுகளுமே கூறி வந்தன. 1949ல் அந்தப் பகுதி யில் போர் விமானங்களை அனுப்பி குண்டு வீசியது பாகிஸ்தான்.

இதனால் பஷ்டூன்கள் கடும் கோபம் அடைந்தனர். “இனி நாங் கள் டூராண்டு எல்லைக் கோட்டினை மதிக்க மாட்டோம். அந்தக் கோட்டுக்கு இரு புறமும் உள்ள பஷ்டூன்கள் வசிக்கும் நிலமும் தங்களுக்குதான் சொந்தம்’’ என்று அறிவித்தனர். ஆப்கானிய பஷ்டூன் இனப் போராளிகள் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். ஆப் கானிஸ்தான் அரசு இவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்தது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் விரோதம் கொண்டன. அடுத்த நாட்டில் இருந்த தத்தம் தூதர் களை இவர்கள் திரும்ப அழைத் துக் கொண்டார்கள்.

இந்த நிலையில்தான் ஆப் கானிஸ்தான் பிரதமர் அமெரிக் காவிடம் போர்த் தளவாடங்களை வாங்க முன்வந்தார். பாகிஸ்தா னுக்கு எதிராகப் பயன்படுத்தத்தான் இந்த ஆயுதங்களை ஆப்கானிஸ் தான் வாங்க முயற்சி செய்கிறது என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. எனவே வணிகம் செய்ய மறுத்தது. ஆப்கானிஸ்தானுக்கு தன் மூலமாக பிற நாடுகள் பெட்ரோல் அனுப்புவதை தடை செய்தது பாகிஸ்தான் அரசு.

இந்த நிலையில் சோவியத் துடன் உறவை ஏற்படுத்திக் கொண்டது ஆப்கானிஸ்தான். வேண்டாவெறுப்பாகதான். பத் திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் பிரதமர் ஷா மகமூது இது தொடர்பாக தெரி வித்த கருத்து உலகெங்கும் தலைப்புச் செய்தியானது.

“முஸ்லிம்கள் பன்றி இறைச்சி தின்னக்கூடாதுதான். ஆனால் ஒரு முஸ்லிம் பசியால் இறந்துவிடும் நிலை ஏற்பட்டால், வேறென்ன செய்வான்?’’

ஆப்கானிஸ்தானுக்குத் தேவை யான பெட்ரோல், துணிமணிகள் போன்றவற்றை சோவியத் யூனி யன் வழங்கியது. கம்பளி, பஞ்சு போன்றவற்றை ஆப்கானிஸ்தான் சோவியத்துக்கு ஏற்றுமதி செய்தது. ஆப்கானிஸ்தானிலுள்ள பெட் ரோல் எண்ணெய் வளங்களைக் கண்டுபிடித்து அவற்றை தோண்டி எடுத்து சோவியத் யூனியன் உதவி செய்தது. 1950ல் இந்த இருநாடுகளும் செய்து கொண்ட உடன்படிக்கையின் விளைவு இது.

1953ல் ஆப்கானிஸ்தான் பிரதமரானார் முகம்மது தாவூத். மேலை நாடுகளில் படித்த இளைஞர் இவர். பெண் விடுதலையில் நம்பிக்கை கொண்டவர். 1959ல் நவீன ஆப்கானிஸ்தானின் 40வது சுதந்திர விழா கொண்டாடப்பட்டபோது, ஆப்கானிய அமைச்சர்களின் மனைவிகள் அலங்காரம் செய்து கொண்டு தங்களைத் திரையிட்டுக் கொள்ளாமல் கவர்ச்சிகரமாக அந்த விழாவில் கலந்து கொண்டதை உலக நாடுகள் வியப்புடன் பார்த்தன.

மதத் தலைவர்கள் எதிர்த்தனர். குரானில் எந்த இடத்திலும் பெண் கள் பர்தா அணியவேண்டும் என்று கூறப்படவில்லை என்றார் தாவூத். தொடர்ந்து எதிர்ப்பு ஊர் வலங்களை நடத்திய தீவிர மதத் தலைவர்களை ஒருவாரத்துக்கு சிறையில் தள்ளினார். இது அவர் களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

பாகிஸ்தானுடன் கொண்ட பகைமை உச்சத்தைத் தொட்டது. இரு நாடுகளின் எல்லைப் பகுதி 1955ல் ஐந்து மாதங்களுக்கு மூடப் பட்டது. இரானும், அமெரிக்காவும் வேறு வணிகப் பாதைகளை தங்க ளால் அமைக்க முடியவில்லை என்று கைவிரித்தன. ஆப்கானிஸ் தானின் வெளிநாட்டு வணிகமே நின்றுபோகும் நிலை. இந்த நிலை யில் சோவியத் யூனியனை மிக அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய நிலை ஆப்கானிஸ்தானுக்கு உண்டானது.

1955ல் ரஷ்ய அதிபர் குருஷ்சேவ் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். பின்னர் காபூலுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்கள் அளிக்கும் என்றார். பஷ்டூனிஸ்தான் (அதாவது ஆப்கானிய - பாகிஸ்தானிய எல்லைப் பகுதியில் பஷ்டூன்கள் நிறைந்த பகுதி) பிரச்சினையில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ் தானுக்கு ஆதரவான நிலையை எடுக்கும் என்றார். 10 கோடி டாலரை நீண்டகாலக் கடனாக ஆப்கானிஸ் தானுக்கு வழங்கினார்.

ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்டனர். “கல்வித்துறைகளில் பயிற்சி பெறத்தான்’’ என்றது ஆப்கானிஸ் தான். ராணுவப் பயிற்சிக்கும்தான் என்பதே உண்மை.

தகவல் தொடர்பு மற்றும் இயற்கை வளம் குறித்து ஆராய்ச்சி கள் ஆகிய பிரிவுகளில் ஆப்கானிஸ் தானுக்கு சோவியத் செய்த உதவி கள் கொஞ்ச நஞ்சமல்ல. பல பிரதான சாலைகள் நிறுவப்பட்டன. புதிதாக விமான நிலையங்கள் கட்டப்பட்டன. காபூலில் ஒரு பிரம்மாண்டமான தொழில்கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டதுட்டது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x