சவுதி விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்: இந்தியர் உட்பட 9 பேர் காயம்

சவுதி விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்: இந்தியர் உட்பட 9 பேர் காயம்
Updated on
1 min read

சவுதியில் அபா விமான நிலையத்தில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சவுதி தரப்பில், ''அபா விமான நிலையத்தில் மீண்டும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பொதுமக்கள் 9 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 8 பேர் சவுதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தார்'' என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பதிலளிக்கவில்லை.

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. சவுதியின் தென் பகுதியில் உள்ள அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான நிலையத்தில் கடந்த மாதமும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்த நிலையில் தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in