Published : 13 Jul 2019 06:40 PM
Last Updated : 13 Jul 2019 06:40 PM

அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 5 பாதுகாப்பு அதிகாரிகள் பலி

அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஆப்கானிஸ்தானில் வணிக வளாகத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகினர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 

இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் மேற்குப் பகுதியில் பத்கஸ் மாகாணத்தில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 5  பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகினர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் பாதுகாப்பு அதிகாரிகள்” என்று தெரிவித்துள்ளனர்.

தலிபான்களுடன் அமெரிக்க பிரதிநிதிகளின் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்  வேளையில் தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருகின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x