Published : 09 Jul 2019 05:22 PM
Last Updated : 09 Jul 2019 05:22 PM
ஆக்கிரமிப்பாளர்கள் ஏமனிலிருந்து விலக வேண்டும் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் மூத்த தலைவரில் ஒருவரான முகமத் அலி ஹுதி கூறும்போது, “ ஐக்கிய அமீரகம் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றது போல, சவுதியும் தங்கள் படைகளை இங்கிருந்து திரும்பப் பெற வேண்டும்.
அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் ஏமனிலிருந்து வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திங்கட்கிழமை ஐக்கிய அமீரகம் ஏமனில் உள்ள தங்கள் படைகளைக் குறைத்துக் கொள்வதாகத் தெரிவித்தது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT