Published : 06 Jul 2019 01:37 PM
Last Updated : 06 Jul 2019 01:37 PM
சிரியா நாட்டின் ராணுவம் நடத்திய வான்வழி குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக போர்க் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தொடுத்த தாக்குதலில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள மஹாம்பல் கிராமத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகுதியில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விமானத் தாக்குதல்களை நடத்தியது, ஏழு குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகம் தெரிவித்துள்ளது.
மாகாணத்தின் தெற்கில் உள்ள கான் ஷேகுன் நகரின் புறநகரில், இன்று காலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பாளர் கூறினார்.
சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இட்லிப், அவர்களில் பலர் முன்னாள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை அரசாங்கம் திரும்பப் பெற்றனர்.
எட்டு ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பின்னர் ரஷ்யா ஆதரவுடைய அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கடைசி முக்கிய கோட்டையாக டமாஸ்கஸ் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT