Published : 13 Jul 2019 12:45 PM
Last Updated : 13 Jul 2019 12:45 PM

சோமாலியாவில் தீவிரவாதத் தாக்குதல்: 2 பத்திரிகையாளர்கள் உட்பட 10 பேர் பலி

சோமாலியாவில் ஓட்டல் ஒன்றில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 10 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சோமாலியா அதிகாரிகள் தரப்பில், “ சோமாலியாவின் கடற்கரை நகரமான கிஸ்மாயோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் இரண்டு பத்திரிகையாளர்கள் உட்பட  10 பேர் பலியாகினர்.  பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கு சண்டையிட்டு வருகின்றனர்.” கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

சோமாலிய அரசுக்கு எதிராக அல் கொய்தாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர், பெரும்பாலும் ஓட்டல்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் என குறிவைத்து தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சோமாலியாவில் செயல்பட்டு வருல் அல் ஷபாப் இயக்கத்துக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தினர் இந்த ஆண்டு முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x