

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக எதிர்க் கட்சித் தலைவர் கைடோவை அங்கீகரிக்கப்பதாக கிரேக்கம் தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் வெனிசுலா திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கீரிஸ்ஸில் கடந்த 7 ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தலைமை ஏற்றுள்ள அரசு கைடோவை இடைக்கால அதிபராக அங்கீரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை கீரிஸின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
கீரிஸ்ஸுடன் தற்போது 50 நாடுகள் கைடோவை இடைக்கால அதிபராக அறிவித்துள்ளது.