Published : 10 Jul 2019 04:14 PM
Last Updated : 10 Jul 2019 04:14 PM
தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு இதுவே சரியான நேரம் இதுதான் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர் தொடர்பாக அதிபர் அஷ்ரப் கானியுடனான பேச்சுவார்த்தை தலிபான்கள் மறுத்தாலும், அமெரிக்க பிரதி நிதிகளுடன் கடந்த சில தினங்களாக தோஹாவில் தலிபான்கள் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட இதுவே சரியான என்று அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஷ்ரப் கானி புதன்கிழமை கூறும்போது, “ கடந்த 18 வருடங்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கான சரியான நேரமாக இல்லை. ஆனால் இது சரியான நேரம்.
நாம் இந்த வாய்ப்பை இழந்துவிட்டால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT