Last Updated : 13 Aug, 2017 11:40 AM

 

Published : 13 Aug 2017 11:40 AM
Last Updated : 13 Aug 2017 11:40 AM

தீவிரவாதிகள் தாக்குதலில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் பீரங்கி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர்.

ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணம் தவுலத்பாத் மாவட்டம் டார்ட் அடாய் என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென 2 பீரங்கி குண்டுகள் வந்து விழுந்து வெடித்தன. இதில் சில வீடுகள் நொறுங்கின. இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்று ஜின்ஹுவா செய்தி ஏஜென்சி நேற்று தகவல் வெளியிட்டது.

ஆனால், இந்தத் பீரங்கி குண்டுகள் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x