Published : 18 Aug 2017 03:31 PM
Last Updated : 18 Aug 2017 03:31 PM

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்

இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழரான ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மக்கள் தொகையில் 15% தமிழர்கள் உள்ளனர். எனினும் விடுதலை புலிகள் மற்றும் இலங்கை அரசுக்குக்கு இடையே நடந்த போரின் காரணமாக இலங்கை அரசு பதவிகளில் தமிழர்கள் தலைமை பதவி வகிப்பது அரிதாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் 2009-ம் ஆண்டு விடுதலை புலிகள் மற்றும் இலங்கை இடையேயான போர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் 45 வருடங்களுக்கு பிறகு தமிழர் ஒருவர் இலங்கை கடற்படை தளபதியாக இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இலங்கை அதிபர் சிறிசேனா இன்று (வெள்ளிக்கிழமை) ட்விட்டர் பக்கத்தில், “ட்ராவிஸ் சின்னையா இலங்கை அரசுக்கு விசுவாசமாக பல ஆண்டுகள் நேர்மையாக பணிபுரிந்துள்ளார். இலங்கை கடற்படை தளபதியாக இன்று பதவி ஏற்கவுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கையின் கிழக்கு மாகாண கடற்படை தளபதியாக ட்ராவிஸ் சின்னையா பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x