Published : 02 Aug 2017 09:53 AM
Last Updated : 02 Aug 2017 09:53 AM

ஹபீஸ் சயீத் வீட்டுக் காவல் நீட்டிப்பு

மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத்தின் வீட்டுக் காவல் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் உத் - தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளித்ததால் கடந்த ஜனவரி 31-ம் தேதி அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஹபீஸ் சயீதின் வீடு லாகூரில் உள்ளது. முதலில் அவருக்கு 90 நாட்கள் வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த 27-ம் தேதியுடன் அவருக்கு வீட்டுக் காவல் நிறைவடைந்த நிலையில் மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x