Published : 31 Aug 2017 09:36 AM
Last Updated : 31 Aug 2017 09:36 AM
டோக்லாம் பகுதியிலிருந்து இந்திய ராணுவம் முதலில் வாபஸ் பெற்றதால்தான் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது என சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா, பூடான் எல்லைகள் சந்திக்கும் டோக்லாமில் கடந்த ஜூன் மாதம் சாலை அமைக்க சீனா முயன்றது. அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு ராணுவமும் எல்லையில் வீரர்களை குவித்திருந்தன. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 73 நாட்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்ததாக 2 தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இதுதொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ நேற்று கூறும்போது, “ஊடகங்கள் ஊகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருக்கலாம். ஆனால், கடந்த 28-ம் தேதி மதியம் இந்திய படைகள் டோக்லாம் பகுதியிலிருந்து முதலில் பின்வாங்கின. இதையடுத்து இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தின் மூலம் இந்தியா பாடம் கற்றிருக்கும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தும் என்றும் நம்புகிறோம்” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT