Published : 06 Aug 2017 12:00 PM
Last Updated : 06 Aug 2017 12:00 PM
பாரிஸ் பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ஐ.நா.விடம் அமெரிக்கா எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளது.
கடந்த 2015 டிசம்பரில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஐ.நா. மாநாட்டில் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்தது.
இந்நிலையில் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜூன் 1-ம் தேதி அறிவித்தார். இந்த நிலைப்பாட்டை ஐ.நா.விடம் அமெரிக்கா நேற்றுமுன்தினம் எழுத்துபூர்வமாக தெரிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து 2019 நவம்பர் 4-ம் தேதி வரை எந்த நாடும் அதிகாரபூர்வமாக வெளியேற முடியாது. அதன்பிறகே ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும். அதற்கு ஓராண்டு காலம் வரை ஆகலாம். எனினும் 2020-ல் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு புதிய அதிபர் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவிக்கலாம் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT