Published : 06 Aug 2017 05:24 PM
Last Updated : 06 Aug 2017 05:24 PM

வடகொரியா மீதான பொருளாதார தடைக்கு ஐநா ஒப்புதல்

வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கு ஐ.நா ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை நடத்தி வரும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை கொண்டு வந்தது. இந்தப் பொருளாதாரத் தடைக்கு அதிபர் ட்ரம்ப்பும் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் வடகொரியா மீது கொண்டு வந்துள்ள பொருளாதாரத் தடைக்கு ஐக்கிய நாடுகள் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் ஐநா தூதர் நிக்கி ஹாலே கூறும்போது, ஐக்கிய நாடுகள் சபை வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைக்கு ஒப்புதல் அளிதுள்ளது. இந்த நூற்றாண்டில் எந்தவொரு நாட்டுக்கும் விதிக்கப்படாத மிகவும் கடுமையான தடைகள் இது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் வடகொரியா  சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது. மேலும் இந்த ஏவுகணை அமெரிக்காவுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரப் பரிசு என்று வடகொரிய அதிபர் கிங் ஜோங் உன் கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x