Published : 01 Aug 2017 09:43 AM
Last Updated : 01 Aug 2017 09:43 AM
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு சீனாவில் எளிதில் தீர்வு காண முடியும். ஆனால் அந்த நாடு எதுவுமே செய்யாததது வருத்தமளிக்கிறது. வடகொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை. வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க தென்கொரியா, ஜப்பானுடன் இணைந்து செயல்படுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். வடகொரியா விவகாரம் தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் தாட் ஏவுகணை தடுப்பு சாதனத்தை வெற்றிகரமாக பரிசோதித்திருப்பதாக அமெரிக்கா நேற்றுமுன்தினம் அறிவித்தது. மேலும் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து வடகொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பதற்றம் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT