Published : 16 Aug 2017 05:31 PM
Last Updated : 16 Aug 2017 05:31 PM
வங்க தேசம், பாகிஸ்தானில் இந்துக்கள் அதிகம் தாக்கப்படுவதாக அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான 2016-ம் ஆண்டிற்கான அறிக்கை ஒன்றை செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் வெளியிட்டது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டீல்லர்சன் கூறும்போது, “இந்தியாவில் பசு பாதுகாவலர்கள் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதே போன்று வங்க தேசத்திலும் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் நடந்து வருகிறது. குறிப்பாக இந்துக்கள் வங்க தேசத்தில் அதிகமாக தாக்கப்படுகிறார்கள்” என்றார்.
அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அக்டோபர் மாதத்தில், வங்க தேசத்தில் கிழக்குப் பகுதியிலுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளும், அவர்களின் 15 வழிபாட்டுத் தலங்களும் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
பாகிஸ்தனைப் பொறுத்தவரை அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
மலேசியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர்வரை 8-க்கும் அதிகமான இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மொரீசியஸில் கடந்த ஆண்டைப் பொறுத்தவரை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே மோதல்கள் நடந்துள்ளன. ஆனால் அவை வன்முறை சம்பவமாக உருவாகவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT