Last Updated : 18 Aug, 2017 02:40 PM

 

Published : 18 Aug 2017 02:40 PM
Last Updated : 18 Aug 2017 02:40 PM

மிகப்பெரிய விண்கல் செப்டம்பர் 1-ம் தேதி பூமிக்கு அருகே கடந்து செல்லும்: நாசா தகவல்

 

மிகப்பெரிதான விண்கல் ஒன்று வரும் செப்டம்பர் 1-ம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என்றும் இதனால் ஆபத்து எதுவுமில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா தெரிவித்துள்ளது.

ஃப்ளாரன்ஸ் என்ற இந்த விண்கல் என்பது பலமைல்கள் அளவு கொண்ட மிகப்பெரிய விண்கற்களில் ஒன்றாகும். நாஸாவின் ஸ்பிட்சர் ஸ்பேஸ் தொலைநோக்கி மற்றும் நியோவைஸ் மிஷன் ஆகியவையின் கணக்கீட்டின்படி இந்த விண்கல் 4.4 கிமீ அளவு கொண்டதாகும்.

பூமியை 7 மில்லியன் கிமீ தொலைவில் இந்த விண்கல் பூமியைப் பாதுகாப்பாகக் கடக்கும், பூமியை இவ்வளவு நெருக்கமாகக் கடக்கும் விண்கல் இந்த ஃப்ளாரன்ஸ் விண்கல்லாகவே இருக்கும் என்று நாஸா தெரிவித்துள்ளது.

இதனால் இந்த விண்கல்லை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தரையில் உள்ள ராடார்கள் மூலம் ஃப்ளாரன்ஸ் பூமியைக் கடந்து செல்லும் போது அதன் உண்மையான அளவும், விண்கல்லின் 10மீ வரையில் சிறிய அளவிலான சிறிய மேற்புறத் தகவல்கள் கிடைக்கும் என்றும் விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த புளோரான்ஸ் விண்கல்லை ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்கெல்ட் பஸ் 1981-ம் ஆண்டு கண்டுபிடித்தது. இதன் பெயர் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. 1890-க்குப் பிறகு விண்கல் ஒன்று பூமிக்கு இவ்வளவு நெருக்கமாகக் கடந்து செல்கிறது. 2,500 வரை இந்த விண்கல் மட்டுமே இவ்வளவு நெருக்கமாகச் சென்ற விண்கல்லாகவும் இருக்கும் என்கிறது நாஸா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x