Published : 10 Aug 2017 10:26 AM
Last Updated : 10 Aug 2017 10:26 AM

பாரிஸில் காரை மோதி ராணுவ வீர்கள் மீது தாக்குதல்

பாரிஸ் நகரில் ராணுவ வீரர்கள் மீது காரை மோதி மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். அந்நபரை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.

பாரிஸ் நகரில் 2015, நவம்பரில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலுக்கு பிறகு நகரின் முக்கியப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாரிஸ் நகரின் வடமேற்கு புறநகர் பகுதியான லுவெல்லுவா பெர்ரே பகுதியில் நேற்று காலை ராணுவ வீரர்கள் ரோந்துப்பணி முடிந்து தங்கள் முகாம் திரும்ப காத்திருந்தனர். அப்போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை மர்ம நபர் ஒருவர் திடீரென வேகமாக கிளப்பி, கண்ணிமைக்கும் நேரத்தில் ராணுவ வீரர்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து லுவெல்லுவா பெர்ரே மேயர் பேட்ரிக் பால்கனி கூறும்போது, “இது விபத்தல்ல. வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை. இது அமைதியான பகுதி. ராணுவ வீரர்கள் மீதான இத்தாக்குதலை யாரும் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x