Published : 27 Aug 2017 12:17 PM
Last Updated : 27 Aug 2017 12:17 PM
இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தல் அபார் நகரை அந்த நாட்டு ராணுவம் மீட்டுள்ளது.
இராக்கின் வடமேற்கில் நினிவே மாகாணத்தில் தல் அபார் நகரம் உள்ளது. இந்த நகரம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு சுமார் 2,000 ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர்.
ஐ.எஸ். வசம் இருந்த மோசூல் நகரம் அண்மையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இராக் ராணுவத்தின் கவனம் தல் அபார் நகரம் மீது திரும்பியது. கடந்த சில மாதங்களாக அங்கு ராணுவத்துக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இந்நிலையில் தல் அபார் நகரம் நேற்று முன்தினம் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. தல் அபார் நகருக்கு இராக் பிரதமர் அல்-பாக்தாதி நேற்று முன்தினம் நேரில் சென்றார். அங்கு ராணுவ தளபதிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT