Published : 15 Aug 2017 11:00 AM
Last Updated : 15 Aug 2017 11:00 AM
சியரா லியோன் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 312 பேர் பலியாகினர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் சியரா லியோன் நாடு உள்ளது. அந்த நாட்டின் தலைநகர் பிரீடவுனில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக தலைநகரை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன.
அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் அப்படியே உயிரிழந்தனர். காட்டாற்று வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்தமாக 312 பேர் உயிரிழந்திருப்பதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT